நம் நட்பின் ஆழம் கேட்டாய்
ஆழ்கடல் என்றேன்!
நம் நட்புக்கு உவமை கேட்டாய்
நண்டுப்பிடி என்றேன்!
நம் நட்பின் ஆயுள் கேட்டாய்
உலகம் உய்யும் வரை என்றேன்
இத்தனை வினாக்களுக்கும்
விடை பகர்ந்த நான்,
உன் உள் வாயில் ஊறும்
இரத்தம் பற்றி....
அடிக்கடி வரும்
இருமல் பற்றி...
வாட்டி வதைக்கும்
தலை வலி பற்றி...
கேட்டபோது
இன்றைய உலகின்
தலை வலியே
இது தான் என்றாய்
புரியாமல் விளித்தேன்...
புரியும்படி கூறடி என்றேன்
எனக்கு நண்டு என்றாய்
உன் புதிரான பதிலை
புரியாத நானும்
சென்று விட்டேன்
என்வழியே...
என்னையே எனக்களித்தவளே..
என்னுயிர் தோழியே...
உன் மறைவுக்குப் பின் தான்
புரிந்து கொண்டேன்
நண்டு என்றால் கென்சர் என்று...!!!
இளைய நிலா
நன்றி :நவமணி
06/09/98
ஆழ்கடல் என்றேன்!
நம் நட்புக்கு உவமை கேட்டாய்
நண்டுப்பிடி என்றேன்!
நம் நட்பின் ஆயுள் கேட்டாய்
உலகம் உய்யும் வரை என்றேன்
இத்தனை வினாக்களுக்கும்
விடை பகர்ந்த நான்,
உன் உள் வாயில் ஊறும்
இரத்தம் பற்றி....
அடிக்கடி வரும்
இருமல் பற்றி...
வாட்டி வதைக்கும்
தலை வலி பற்றி...
கேட்டபோது
இன்றைய உலகின்
தலை வலியே
இது தான் என்றாய்
புரியாமல் விளித்தேன்...
புரியும்படி கூறடி என்றேன்
எனக்கு நண்டு என்றாய்
உன் புதிரான பதிலை
புரியாத நானும்
சென்று விட்டேன்
என்வழியே...
என்னையே எனக்களித்தவளே..
என்னுயிர் தோழியே...
உன் மறைவுக்குப் பின் தான்
புரிந்து கொண்டேன்
நண்டு என்றால் கென்சர் என்று...!!!
இளைய நிலா
நன்றி :நவமணி
06/09/98

No comments:
Post a Comment