Tuesday, December 10, 2013

பாக்கியசாலி



என் வாழ்வில்
வளம் சேர்க்க
நாளும் பொழுதும்
பரிமளம் தரும்
பாசப்பூக்கள்
ஆமாம்-என்னை
பெற்றவர்கள்

என் கண்ணில்
தூசு விழ
அவர் கண்கள்
நீர் கொட்டும்


என் அங்கம்
 நோய் கண்டால்
ஆவி துடிக்க
வேதனை கொள்வர்


நோய் தீர்க்க
மருத்துவர்கள்
கையில் தானா
என் பிராணம்
தொங்குகிறது?



இல்லவே இல்லை.....


என் உயிருக்கு
ஊட்டம் அளிப்பது
பெற்றவர்கள்
பொழிகின்ற
 பாச மழைதான்!

பூமியில் நான் ஒரு
பாக்கியசாலி!!
-இளைய நிலா

No comments:

Post a Comment