Sunday, December 8, 2013

ஸ்னேகம்



 நம்
 நெஞ்சுக்குள்
 நாதஸ்வரமாய்
ஊடலால் நாமே நமை
சாடி வாடும் போது
நமக்காய்

உண்மை நட்புக்காய்
நம்மிடம்
யாசிப்போருக்கு
யோசனை சொல்வதாய்

நல் நட்பை தொடர
ஆசியும் செய்வதாய்

நமை வேவு பார்க்கும்
ஜனங்களுக்கு அது
ஜன்னல் திறப்பதாய்

நம் நட்பின் உயர்வை
உணரவும் செய்வதாய்

நமை வதைப்போர்
மனதில் நல் விதை
விதைப்பதாய்...


தூற்றுவோருக்குள்ளே
நட்பின் நாற்றை
நட்டும் வைப்பதாய்

நாளை ஊரே
நமை
போற்றிப்பாடும்
போது.......

அது கண்டு நம் ஸ்னேகம்
இன்னும் நூறாண்டுகள்
நலமாக வாழும்!!!
--இளைய நிலா









No comments:

Post a Comment