நம்
நெஞ்சுக்குள்
நாதஸ்வரமாய்
ஊடலால் நாமே நமை
சாடி வாடும் போது
நமக்காய்
உண்மை நட்புக்காய்
நம்மிடம்
யாசிப்போருக்கு
யோசனை சொல்வதாய்
நல் நட்பை தொடர
ஆசியும் செய்வதாய்
நமை வேவு பார்க்கும்
ஜனங்களுக்கு அது
ஜன்னல் திறப்பதாய்
நம் நட்பின் உயர்வை
உணரவும் செய்வதாய்
நமை வதைப்போர்
மனதில் நல் விதை
விதைப்பதாய்...
தூற்றுவோருக்குள்ளே
நட்பின் நாற்றை
நட்டும் வைப்பதாய்
நாளை ஊரே
நமை
போற்றிப்பாடும்
போது.......
அது கண்டு நம் ஸ்னேகம்
இன்னும் நூறாண்டுகள்
நலமாக வாழும்!!!
--இளைய நிலா

No comments:
Post a Comment