Monday, December 9, 2013

அம்மா



சின்ன சின்ன
சிங்காரங்கள்
நானும் செய்கையில்...


எனை கட்டியனைத்து
நெட்டி முறித்து
தழுவிக்கொள்ளுவாய்...

நீ உடுத்தி அவிழ்த்த
சேலை சுற்றித்
திரியும் போதிலே

ஒளிந்து நின்று
பார்த்து ரசித்து
உச்சுக்கொட்டுவாய்

மழையில் நானும்
நனைய உந்தன்
குழையும் நடுங்குமே
விலையில்லாத செல்வமே
என அள்ளி அனைக்குமே

என் பிஞ்சு கால்களையும்
 கண்ணில் ஒற்றி
 கொஞ்சி மகிழ்வாய்.
வஞ்சமில்லா
பாசம் தந்து
 நெஞ்சம் மகிழ்வாய்

உனை எண்ணும் போது
எந்தன் மனம் கர்வம் கொள்ளுதே

இந்த தூய்மையான
தாய்மையதை
போற்றிப்பாடுதே....
-இளைய நிலா


No comments:

Post a Comment