Wednesday, February 26, 2025

பழமையும் புதுமையும் *************************

 


வாழ்க்கைப் படிக்காய்

வாசற் படி தாண்டிய

வரலாறு காலாவதியாகிவிட்டது

            *-*-*


வீட்டுக்குள் இருந்து கொண்டு 

வேதனம் பெறுமளவு

விஞ்ஞானம் வந்து விட்டது 

              *-*-*


தோதுக்கு ஏற்றாற் போல்

தொழில் செய்யும் வகையாக 

தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது

              *-*-*- 


இருப்பினும் கூட

இன்றைய உலகில் எல்லாம் 

இயந்திரம் ஆகிவிட்டது 

             *-*-*-


ஆதலினால் ...


அலுவலகம் போன்று 

ஆளுமை வளர்க்க 

ஆளணி கிடைப்பதில்லை 

              *-*-*-


இரவும் பகலும்

இணையத்தோடிருப்பதனால்

உறவுகள் பாவம்

உயிர்ப்பிக்கப் படுவதில்லை 

          *-*-*-*


அன்றாடம் மனிதன்

அலைந்து பெறுகின்ற

அனுபவம் கிடைப்பதில்லை 

            *-*-*-


வெயிற் பால் குடித்து

வேலைகள் செய்துடல்

வியர்வை சுரப்பதில்லை 

              *-*-*-


ஒரேயோர் இடத்தில் 

உட்கார்ந்திருப்பதனால்

உடற்பயிற்சி நடப்பதில்லை

           *-*-*-*


நாள் தோறும் வீட்டுக்குள் 

நகராமல் இருப்பதனால்

நடைப் பயிற்சி கிடைப்பதில்லை

               *-*-*-


பழைமைகள் முழுதிலும்

பராமுகம் கொண்டால் நம்

பயணத்தில் வெற்றியில்லை

                *-*-*-


பஸ்மினா அன்ஸார்

No comments:

Post a Comment