ஆயிரந்தான் செய்தாலும்
அலங்காரம்
அனைத்தையுமே தோற்கடிக்கும்
அகங்காரம்
அர்ப்பணிப்போ டுழைக்கிறது
கடிகாரம்
அதை இயக்கத் தேவையில்லை
அதிகாரம்
அடுக்காது பெண்ணுக்கு
முன் கோபம்
அவளுக்கே விளைவிக்கும்
அது சேதம்
சுமந்தாலும் குடும்பத்தின்
சுமை தாரம்
சூநிலைக் கைதிதான்
அவள் பாவாம்
பொறுமையாய் இருப்பதனால்
சம்சாரம்
புறம்போக்கும் காட்டலாம்
தன்வீரம்
சுமைதாங்கி என்பதற்காய்
தன்தாரம்
சுமத்துவது தர்மமில்லை
பெரும்பாரம்
உறவுக்குப் பகை என்றும்
சந்தேகம்
உண்டானால் உனக்கில்லை
சந்தோஷம்
ஆகாது ஒருபோதும்
பிடிவாதம்
ஆறாத துயரந்தான்
அதில் மீதம்
உழைத்துண்டு வாழ்வதுதான்
தன்மானம்
அடுத்தவனை எதிர்பார்த்தல்
அவமானம்
நேர்மையான உழைப்பேநல்
பெறுமானம்
நிலைத்திருக்கும் நிஜஉழைப்பின்
வருமானம்
நீதிக்கு மனசாட்சி
ஆதாரம்
நேர்மைக்கு நேராது
சேதாரம்
உள்ளன்பில் கொடுப்பதுவே
பரிசாகும்
எள்ளளவும் செய்யாதே
பரிகாசம்
சகுனங்கள் கை கூடி
வரும் நேரம்
சவாலிலே தோற்றுவிடும்
பரிகாரம்
நீ வாழு உன்கையில்
நிகழ்காலம்
நிச்சயமே இல்லையடா
எதிர்காலம்
பஸ்மினா அன்ஸார்
No comments:
Post a Comment